சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் வான்மதி, மகன் ஜெகதீஸ்(27). வான்மதிக்கும், மல்லூரைச் சேர்ந்தவருக்கும் நேற்று (27-ம் தேதி) திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகோதரியின் திருமணவிழாவில் கலந்து கொள்ள ஜெகதீஸ் தனது நண்பர்களான தொட்டில்பட்டியைச் சேர்ந்த அஜீத்(20), கார்த்திகேயன்(20) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மல்லூரை நோக்கி சென்றார்.
நேற்று அதிகாலை மல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மீது பைக் மோதியதில் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அஜீத், கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவமமனையில் சிகிச்சை பலனின்றி ஜெகதீஸ் உயிரிழந்தார். விபத்து குறித்து மல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
52 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கார்ட்டூன்
3 hours ago