தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7.71 லட்சத்தை கடந்துள்ளது. இளைஞர்கள் உட்பட 11,622 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று 958 ஆண்கள், 666 பெண்கள் என மொத்தம் 1,624 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 483, கோவையில் 140, செங்கல்பட்டில் 99 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 71,619 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 2 லட்சத்து 4,328 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 47,752 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 504 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,904 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 4,354 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 12,245 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 8 பேர், தனியார் மருத்துவமனைகளில் 9 பேர் என நேற்று 17 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 6 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,622ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,822 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 12,504,கோவையில் 47,676, செங்கல்பட்டில் 46,960, திருவள்ளூரில் 40,428 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.
தமிழகத்தில் 217 அரசு மற்றும்தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 16 லட்சத்து 6,250பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 65,012 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
42 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
50 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
56 mins ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago