சுரங்கனாறு நீர்வரத்து வாய்க்காலில் கனமழையால் மண் அடைப்பு :

By செய்திப்பிரிவு

கனமழையால் சுரங்கனாறு நீர்வரத்து வாய்க்காலில் மண் மேவி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பாதையில் 18-ம் கால்வாயின் குறுக்கே நீர்வரத்து வாய்க்கால் உள்ளது. சுரங்கனாறு மற்றும் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து இந்த பாலம் வழியாக கூடலூர் ஒட்டான்குளத்திற்குச் செல்கிறது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் மண் அதிகளவில் அடித்து வரப்பட்டு வாய்க்காலில் சுமார் 5 அடி உயரத்துக்கு அடைத்துக் கிடக்கிறது. இதனால் ஒட்டான்குளத்துக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதர்களை வெட்டியும், மேவிய மண்ணை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலக்கூடலூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்