திருப்பத்தூரில்2 உள்நோயாளிகளுக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 2 உள் நோயாளிகளுக்கு கரோனா இருப்பது உறுதியானதை அடுத்து, அவர்கள் தங்கியிருந்த வார்டு அறை மூடப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 7,239 பேர் பாதிக்கப்பட்டு, 239 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் வெவ்வேறு நோய்களுக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட 2 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த வார்டு அறையில் கிருமி நாசினி தெளிக்கப் பட்டு மூடப்பட்டது. அங்கு தங்கியிருந்த மற்ற நோயாளிகள் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டனர். மேலும் அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்