பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.3.52 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

வேடசந்தூரில் சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படையினர் ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3.52 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துப்பாலம் அருகே பறக்கும்படையினர் அலுவலர் வஞ்சிமுத்து, தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாளையத்தில் இருந்து துணிக்கடை உரிமையாளர் காளியப்பன் வந்த காரை சோதனையிட்டதில் ரூ.3.52 லட்சம் ஆவணங்கள் இன்றி கொண்டுசென்றது தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுசென்றதால் கணக்கில் வராத பணம் என்று கூறி பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை வேடசந்தூர் வட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான சக்திவேலனிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

16 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்