நாமக்கல் மாவட்டத்தில் நாளை 7-வது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை முதல் தவணை தடுப்பூசி 9 லட்சத்து 47ஆயிரத்து 626 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 85 ஆயிரத்து 337 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 8,269 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 868 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 6 கட்ட தடுப்பூசி முகாம்களில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 523 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுபோல் நாளை (30-ம் தேதி) 7-ம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 750 முகாம்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
30 mins ago
தமிழகம்
59 mins ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago