திருச்சி, பெரம்பலூரில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

திருச்சி மற்றும் பெரம்பலூரில் இன்று (அக்.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் இன்று(அக்.29) காலை 10.30 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்க உள்ளன.

இதில், 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி (டர்னர், வெல்டர், ஃபிட்டர்) முடித்த 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், சுய விவரக் குறிப்பு, ஆதார் கார்டு நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வரலாம் என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக்.29) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. எனவே, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த இருபாலரும் இம்முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் என ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்