தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-ம்ஆண்டில் 128 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில்2020-ம் ஆண்டு பாலியல் குற்றவாளிகள் 19 பேர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேர் உள்ளிட்ட 128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு 77 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 2020-ல் கூடுதலாக 51 பேர் இச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை வழக்குகள்
போதைப்பொருள்
இதுபோல் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை தொடர்பாக 841 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.58,54,396 மதிப்புள்ள 9,587 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 327 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் திருட்டு
கடந்த ஆண்டு சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்பந்தமாக 126 வழக்குகள் பதிவான நிலையில், 159 பேர் கைது செய்யப்பட்டு 187 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டு 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 223 பேர் கைது செய்யப்பட்டு, 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாலை விபத்துகள்
2020-ல் 233 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 1,004 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன, இவற்றில் 252 பேர் மரணமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டு 272 சாலைவிபத்து வழக்குகள் உட்பட 1,217 வழக்குகள் பதிவாகியுள்ளன, இவற்றில் 303 பேர் மரணமடைந்துள்ளனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 213 சாலை விபத்துகள் குறைவாக நடைபெற்றுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கையும் 51 குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் 95 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
15 mins ago
இந்தியா
15 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago