தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் காத்திருப்புப் பட்டியல் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கூட்ட நெரிசல் வழித்தடங்களான திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட்டிகள் இணைப்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 4சிறப்பு ரயில்களும், கோவைவழித்தடத்தில் ஒரு சிறப்புரயிலும் இயக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செகந்திராபாத் சிறப்பு ரயில்
செகந்திராபாத்தில் இருந்து வரும் 19, 26, நவம்பர் 2, 9, 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28-ம் தேதிகளில் இரவு 9.25 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07685), அடுத்த 3-வது நாள் அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரம் வந்தடையும்.மறுமார்க்கமாக வரும் 21, 28, நவம்பர் 4, 11, 18, 25, டிசம்பர் 2, 9, 16, 23, 30-ம் தேதிகளில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07686), அடுத்த 3-வது நாளில்காலை 7.10 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும். திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், காட்பாடி, திருப்பதி வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை8 மணிக்குத் தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
4 hours ago