ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அந்நாட்டில் இருந்து ஏராளமானோர்வெளியேறினர். ஆயிரக்கணக்கானோர் வெளியேற விருப்பம் இருந்தும் வெளியேற முடியாமல் அங்கேயே தவித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்படத் தொடங்கும் என்று தலிபான்கள் நேற்று முன்தினம் அறிவித்தனர்.
இதையடுத்து, காபூலில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். அந்தக் கட்டிடத்தின் மேல் இருந்த தலிபான் அதிகாரி ஒருவரிடம் தங்கள் விண்ணப்பங்களை கொடுக்கமுயன்றனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்களை திரும்பிச் செல்லுமாறும் சனிக்கிழமை வருமாறும் அந்த அதிகாரி கேட்டுக் கொண்டபோதும் மக்கள் அங்கிருந்து செல்லாமல் நின்றனர்.
ஏராளமானோர் திரண்டு ஒரேநேரத்தில் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுக்கமுயன்றனர். ‘எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஆப்கனில் இருந்து வெளியேற விரும்புகிறோம். முறையாக பதில் அளிக்கவும் யாரும் இல்லை‘ என்று பலர் வருத்தமுடன் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
8 hours ago
சினிமா
1 hour ago
இலக்கியம்
8 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
1 hour ago