தாய் மூகாம்பிகை கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை ஆரியநாட்டுத் தெருவில் உள்ள தாய் மூகாம்பிகை கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

தொடர்ந்து, மாசி மக பிரம்மோற்சவ கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நாகை நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோயிலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த கொடி ஊர்வலம் தாய் மூகாம்பிகை கோயிலை வந்தடைந்ததும், அங்கு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் இருந்து இன்று (பிப்.24) பால்குட ஊர்வலம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் பிப்.26-ம் தேதியும் புதிய கடற்கரையில் தீர்த்தவாரி கண்டருளுதல் பிப்.27-ம் தேதியும் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 mins ago

ஓடிடி களம்

15 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

50 mins ago

தொழில்நுட்பம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்