குவாஹாட்டி, சிரபுஞ்சிக்கு சுற்றுலா ஐஆர்சிடிசி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இருந்து குவாஹாட்டி - ஷில்லாங், சிரபுஞ்சி - காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட ஐஆர்சிடிசி விமான சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா ஊரடங்கில் மத்திய அரசு தளர்வு அளித்துள்ளதால், பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களுக்கு சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். கரோனா ஊரடங்கில் மனச்சோர்வில் இருக்கும் மக்கள் நிம்மதியாக சுற்றுலா பயணம் மேற்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி, வரும் பிப்ரவரி 27-ம்தேதியில் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு மேகாலயா - அசாமில் இருக்கும் குவாஹாட்டி,- ஷில்லாங், சிரபுஞ்சி - காசிரங்கா தேசிய பூங்காவை சுற்றி பார்க்கும் வகையில் விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

5 நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.36 ஆயிரத்து 500 கட்டணமாகும். விமான கட்டணம், நட்சத்திர ஓட்டல், போக்குவரத்து கட்டணம், நுழைவுச்சீட்டுகள், உணவுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் தகவல் பெற 9003140682, 8287931973 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

விளையாட்டு

12 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்