தமிழகத்தில் இருந்து குவாஹாட்டி - ஷில்லாங், சிரபுஞ்சி - காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட ஐஆர்சிடிசி விமான சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கில் மத்திய அரசு தளர்வு அளித்துள்ளதால், பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களுக்கு சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். கரோனா ஊரடங்கில் மனச்சோர்வில் இருக்கும் மக்கள் நிம்மதியாக சுற்றுலா பயணம் மேற்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, வரும் பிப்ரவரி 27-ம்தேதியில் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு மேகாலயா - அசாமில் இருக்கும் குவாஹாட்டி,- ஷில்லாங், சிரபுஞ்சி - காசிரங்கா தேசிய பூங்காவை சுற்றி பார்க்கும் வகையில் விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
5 நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.36 ஆயிரத்து 500 கட்டணமாகும். விமான கட்டணம், நட்சத்திர ஓட்டல், போக்குவரத்து கட்டணம், நுழைவுச்சீட்டுகள், உணவுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் தகவல் பெற 9003140682, 8287931973 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
விளையாட்டு
12 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago