சென்னை: வேலூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் 3 ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதிகளில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.10.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சேலம் மாவட்டம் மரவனேரி ஆகிய இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி மற்றும் வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் அமைய உள்ளன. இந்த புதிய கட்டிடங்களை பொதுப் பணித்துறையின் மூலமாக கட்டுவதற்கு ஏதுவாக நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையிடப்படுகிறது. அதன்படி, வேலூர் விடுதிக்கு ரூ.1.60 கோடியும், திண்டிவனத்துக்கு ரூ.3.68 கோடியும், மரவனேரி விடுதிக்கு ரூ.5.47 கோடியும் என மொத்தம் ரூ.10.75 கோடி நிதி வழங்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
24 mins ago
க்ரைம்
59 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago