3 ஆதிதிராவிடர் கல்லூரி விடுதிகளுக்கு ரூ.10.75 கோடி நிதி ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

சென்னை: வேலூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் 3 ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதிகளில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.10.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சேலம் மாவட்டம் மரவனேரி ஆகிய இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி மற்றும் வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் அமைய உள்ளன. இந்த புதிய கட்டிடங்களை பொதுப் பணித்துறையின் மூலமாக கட்டுவதற்கு ஏதுவாக நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையிடப்படுகிறது. அதன்படி, வேலூர் விடுதிக்கு ரூ.1.60 கோடியும், திண்டிவனத்துக்கு ரூ.3.68 கோடியும், மரவனேரி விடுதிக்கு ரூ.5.47 கோடியும் என மொத்தம் ரூ.10.75 கோடி நிதி வழங்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

24 mins ago

க்ரைம்

59 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்