ஈரோடு ரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் :

By செய்திப்பிரிவு

ஜார்க்கண்டில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன் தினம் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. ரயில்வே பாதுகாப்புப் படை குற்றப்புலனாய்வுப் பிரிவு எஸ்.ஐ. கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார், அந்த ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பையில் மறைத்து எடுத்துவரப்பட்ட 9 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

40 mins ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்