கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில், வர்த்தக மற்றும் வணிக வாரம் அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில் 23-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு, சுகுணா திருமண மண்டபத்தில் ஏற்றுமதி வழிகாட்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இக்கருத்தரங்கில் ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் திட்ட விளக்கங்கள் அரசு அலுவலர்களால் வழங்கப்படுகிறது. ஏற்றுமதி தொடர்பான அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. எனவே, ஏற்றுமதி தொழில் செய்ய ஆர்வம் உள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் நிறுவனத்தினர் கருத்தரங்கில் பங்கேற்று பயன் பெறலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
10 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
43 mins ago
இந்தியா
49 mins ago
வணிகம்
45 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago