தொழிலாளியை மிரட்டிய 5 பேர் கைது :

By செய்திப்பிரிவு

மணியாச்சி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மந்திரமூர்த்தி(45). இவர் நேற்று முன்தினம் மாலை ஓட்டப்பிடாரம் பகுதியில் நடந்து வந்தபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர், மந்திரமூர்த்தியை வழிமறித்து ஆயுதங்களை காண்பித்து மிரட்டியுள்ளனர். ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் பன்னீர்குளம் சாலையில் ரோந்து சென்றபோது, அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை பிடித்துவிசாரணை நடத்தினர். இதில்,அவர்கள் முறப்பநாடு பக்கப்பட்டியைச் சேர்ந்த வடிவேல் முருகன் (21), பாளையங்கோட்டையைச் சேர்ந்த வேல்முருகன்(28), பாளையங்கோட்டை குன்னத்தூரைச் சேர்ந்த பிறமுத்து மணிகண்டன் (என்ற) காளை (20), திருநெல்வேலி மேலநத்தத்தைச் சேர்ந்த மகாராஜன் (என்ற) ராஜா (21), திருநெல்வேலி புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த கண்ணன் (என்ற) ஆனந்த் (24) என்பதும், இவர்கள் 5 பேரும் மந்திரமூர்த்திக்கு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. 5 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

22 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

42 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்