தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

அரியலூர்: தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி பயன்களை வழங்க வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தரைக்கடை வியாபாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சந்திரகுமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், கந்து வட்டி கும்பலிடமிருந்து தரைக்கடை வியாபாரிகளை மீட்க வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும். வியாபாரச் சான்று, அடையாள அட்டை வழங்க வேண்டும். மத்திய மற்றும் மாநில தெரு வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்தி பயன்களை வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியிடம் வழங்கி, முதல்வருக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டனர். மாவட்டத் தலைவர் தனசிங் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்