அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு - ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கும் தலைமை ஆசிரியர் :

By செய்திப்பிரிவு

வில்லிபுத்தூர் அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர் களுக்கு சொந்த பணத்தில் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார் தலைமை ஆசிரியர் ஒருவர்.

ஜூன் 14 முதல் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இதன்படி வில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் க.மகேஸ்வரி முன்னிலையில் தொடங்கியது.

அப்போது, பள்ளியில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாட நூல்களுடன் தனது சொந்தப் பணத்தில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார்.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை இவர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறுகையில், மாணவர்களின் பெற்றோர் வாழ்வாதாரம் இழந்து கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார்கள். இந்த ஊக்கத் தொகை அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்