சிங்காநல்லூர் அருகேயுள்ள கக்கன் நகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(28). இவரும், இவரது நண்பர்கள் மகேஷ், குமார் ஆகியோரும், ஏற்கெனவே இருந்த பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேற்று காலை சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள ஆனந்தகுமார் என்பவர் வீட்டுக்கு வந்தனர். பேச்சுவார்த்தையின் போது தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தகுமாருக்கு ஆதரவாக, அவரது மகன்கள் சதீஷ், சரவணகுமார் மற்றும் ஹரி உள்ளிட்டோர் வந்தனர்.
ஒரு கட்டத்தில் ஆனந்தகுமார் தரப்பினர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால், வசந்தகுமாரையும், அவருடன் வந்த இரு நண்பர்களையும் தாக்கினர். இந்த தாக்குதலில் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து பட்ட, வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த வசந்தகுமாரின் நண்பர்கள் மகேஷ், குமார் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற சூலூர் போலீஸார், வசந்தகுமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிந்து, ஆனந்தகுமார் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
இந்தியா
9 mins ago
விளையாட்டு
59 mins ago
தமிழகம்
28 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago