ஓசூர் வட்டத்தில் நேற்று குளிர்ந்த காற்று வீசி இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் நகரப்பகுதி குளிர்ச்சியான தட்பவெட்ப நிலைக்கு மாறியது.
ஓசூர் பகுதியில் கோடைகாலத்தில் கடந்த இரண்டு வார காலமாக வானில் கார்மேகம் திரண்டு குளிர்ந்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்கிறது. தொடர்ந்து நேற்று காலை கோடையில் வழக்கமான வெயில் சுட்டெரித்தது. பிற்பகல் 3 மணிக்கு மேல் வானில் கார் மேகம் திரண்டு, மழை வரும் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசியது.
பின்பு மாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. அதேபோல மத்திகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உரிகம், அஞ்செட்டி, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கோடை மழையினால் ஓசூர் நகரப்பகுதி குளிர்ச்சியான தட்பவெட்ப நிலைக்கு மாறியுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 mins ago
இந்தியா
16 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
32 mins ago
விளையாட்டு
40 mins ago
தமிழகம்
55 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago