கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போலீஸார் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போலீஸார் நேற்று உயிரிழந்தனர்.

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கண்காணிப்பு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களான போலீஸார் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார், அதிகாரிகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக சென்னைஆயுதப்படை தலைமைக் காவலர் கமலநாதன் (44) கடந்த மாதம் 25-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைபலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதேபோல, கரோனா தொற்று காரணமாக உளவுத் துறை (எஸ்.பி.சி.ஐ.டி.) உதவிஆய்வாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவடி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த உதவி ஆய்வாளர் சின்னகண்ணு(55), கரோனா தொற்று அறிகுறியுடன் கடந்த மாதம் 28-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

இந்தியா

27 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்