ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு - 30 கிலோ கஞ்சா கடத்தியவர் வேப்பனப்பள்ளியில் கைது :

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இருசக்கர வாகனத்தில் 30 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதி, ஆந்திர, கர்நாடக மாநில எல்லையோரம் அமைந்துள்ளது. வேப்பனப்பள்ளி - தீர்த்தம் சாலையில் உள்ள கொத்தகிருஷ்ணப்பள்ளி இணைப்பு சாலையில் சிறப்புகாவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீஸார்வாகனத் தணிக்கை மேற்கொண் டனர். அவ்வழியே இருசக்கர வாகனத்தில், இரு பைகளுடன் சந்தேகத்திற்குகிடமாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த ராஜப்பா (43) என்பதும், ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து தீர்த்தத்திற்கு விற்பனைக்காக கஞ்சா எடுத்து வந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராஜப்பாவை கைது செய்தனர். மேலும், 30 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்