கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘‘ கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும், மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும், அதற்கு பதில் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் பணி நாளாகவும் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 22-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் இயங்கும்போது, பொதுமக்கள் வந்து ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல முடியாது. எனவே, முழு ஊரடங்கு திரும்பப் பெறும் வரை, மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு வேலை நாட்களாகவும், அதற்கு பதில் மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
46 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago