தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே முதியவரை கத்தியால் குத்திய விவசாயி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
காரிமங்கங்கலம் வட்டம் கம்பைநல்லூர் அருகிலுள்ள கொங்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி (72). இவர் ஊர் முக்கிய பிரமுகராகவும் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முருகன், மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக பழனி சமாதான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி முருகன், ஊர் முக்கிய பிரமுகர் பழனியிடம் நேற்று முன் தினம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின்போது முருகன் தன்னிடம் இருந்த கத்தியால் பழனியை குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பழனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விவசாயி முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
வாழ்வியல்
29 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago