கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தபால் வாக்குகள் எண்ணும் பணியில் 140 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (2-ம் தேதி), கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது. இன்று காலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தபால் வாக்குகள் பொறுத்தவரை 80 வயதிற்கு மேற்பட்ட 2,243 மூத்தகுடிமக்கள், 531 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 2,774 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். இதேபோல், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் என 7,901 வாக்குகள் தபால்கள் மூலம் வரப்பெற்றுள்ளது.
மேலும், தபால் வாக்குகள் எண்ணும் பணியில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 140 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
க்ரைம்
3 mins ago
சினிமா
18 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago