பர்கூர் அருகே பெண் சிசு சடலமாக மீட்பு :

By செய்திப்பிரிவு

பர்கூர் அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள அஞ்சூர் கிராமத்தில், கிருஷ்ணா ஜிராவ் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை யொட்டி நேற்று காலை சாலையில் சென்றவர்கள், ஒரு பெண் சிசு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் அளித்த தகவலின் பேரில், கந்தி குப்பம் போலீஸார் நிகழ் விடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், பெண் சிசு சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

29 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்