முதுகுளத்தூரில் அரசு மேல் நிலைப் பள்ளி சார்பில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் பார்வதி தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். தலைமை ஆசிரியர் சந்தனவேலு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் அலுவலர் மங்கள நாதன் செய்திருந்தார். என்.சி.சி அதிகாரி அருள்தாஸ், உடற்கல்வி ஆசிரியர் சிவக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago