தருமபுரி அருகே ஒரே கிராமத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் செக்கோடி கிராமத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. செக்கோடி மோட்டுப்பட்டி கிராமத்தில் மாட்டு வியா பாரிகள் உட்பட 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. செக்கோடி வழியாக பாப்பாரப்பட்டி செல்லும் சாலை மூடப்பட்டது. அப்பகுதியில் இருந்து பொது மக்கள் வெளியே செல்வதற்கும்,வெளி ஆட்கள் உள்ளே செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா, பிடிஓ., விமலன், தண்டபாணி, வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு, சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் கரோனா பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
கட்டிகானப்பள்ளி
இதையடுத்து, நேற்று காலை ஊராட்சி தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் தலைமையில், ஊராட்சி அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்தனர்.
தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மை பணி மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago