கரோனா ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளத் தனமாக மதுபானங்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் க.தேவமணி கோரிக்கை விடுத்துள்ளார்
இதுதொடர்பாக புதுச்சேரி கலால் துறை இயக்குநருக்கு அண்மையில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தின்போது, புதுச்சேரி மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு கலால் துறை சீல் வைத்தது.
ஆனால், 100-க்கும் மேற்பட்ட கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படை யில், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட மதுக் கடை களை மூட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், கடைகளில் உள்ள மது இருப்பு குறித்த கணக்கை கலால் துறை கையகப் படுத்த வேண்டும். அனைத்துக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதிப் படுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
8 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
14 mins ago
ஆன்மிகம்
24 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago