சுனாமி அச்சத்தால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயக்கம் :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் 5 விநாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மீனவ கிராமத்தினரிடையே சுனாமி அச்சம் ஏற்பட்டது. கடலுக்குள் சுனாமி ஏற்பட்டு கடல் சீற்றம் நிகழுமோ என்ற பீதி நிலவியது. இதனால் கன்னியாகுமரி, கோவளம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு செல்லாமல் கரை திரும்பினர். நேற்று அமைதியான சூழல் நிலவியது. எப்போதும்போல் கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தமான போதும், வழக்கத்தை விட குறைந்த அளவு மீனவர்களே கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

21 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்