முதுகுளத்தூர் அருகே உடல்நலம் இன்றி இறந்த மனைவியை சைக்கிளில் எடுத்துச் சென்று கண வர் அடக்கம் செய்தார்.
முதுகுளத்தூர் அருகே காக்கூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த விவ சாயி மூக்காண்டி (75). இவரது மனைவி அழகு (70). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். மகன், மகள்களுக்கு திருமணமாகி விட்டதால் மூக்காண்டி மற்றும் அழகம்மாள் காக்கூரில் தனியாக வசித்து வந்தனர். மூக்காண்டியின் மனைவி அழகு கடந்த 15 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்து வந்தார். அதில் கடந்த சில ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்துள்ளார். தனது மனைவி அழகுக்கு அனைத்து பணிவிடைகளையும் மூக்காண்டி செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட் களுக்கு முன்பு அழகுக்கு உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனால் மூக்காண்டி சென்னை யில் உள்ள தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார். மகனும் வந்து தாய், தந்தையை பார்த் துள்ளார். அப்போது மூக்காண்டி தனது மகனிடம் 2 நாட்களில் தாய் இறந்துவிடுவார். அதனால் தங்கியிருந்து காரியங்களை செய் துவிட்டுச் செல் எனக் கூறியுள்ளார். ஆனால் மகன் ராமமூர்த்தியோ தனக்கு வேலையிருக்கிறது எனக் கூறி சென்னைக்கு சென்றுவிட்டார்.
கடந்த சனிக்கிழமை இரவு அழகு உயிரிழந்தார். பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் மனம் வெறுத்த முதியவர் மூக் காண்டி நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் இறந்த தனது மனைவியை சைக்கிளில் கொண்டு சென்று அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்தார். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த மூக்காண்டியின் மகள் தனது தாயைத் தேடியபோது மூக்காண்டி நடந்த விவரங்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராமையா முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, புதைக் கப்பட்ட அழகுவின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்த பின்பு, மீண்டும் அடக்கம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
இந்தியா
32 mins ago
சினிமா
49 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago