காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் - மீனவர்களுக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு, ஃபைபர் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று, மீன்பிடித்து வருகின்றனர்.

இவ்வாறு பிடித்து வரும் மீன்களை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ஏலம் விடுவது, விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன் வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை, மீன் வளத் துறை சார்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இதில், 45 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. முதல்நாளான நேற்று 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்