கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவத்தில், அமமுகவைச் சேர்ந்த 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நாளான நேற்று முன்தினம் கோவில்பட்டி புதுக்கிராமம் முகமது சாலிகாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே பணம் விநியோகம் நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர். அதிமுககிளை செயலாளர் ஆரோக்கியராஜிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ரூ.12,290 இருந்தது. அவரை கிழக்கு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே, தெற்கு புதுக்கிராமத்தில் ஆரோக்கியராஜின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதுதொடர்பாக, அமமுகவைச் சேர்ந்த வேலு, துரை, கணேசன், கோமதி சங்கர், காசி ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago