செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி இரும்பு கம்பிகளை - கூடுதல் விலைக்கு விற்பதாக வழக்கு : சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி இரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பதாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயம்புத்தூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 6 மாதங்களாக இரும்புக் கம்பிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கம்பிகள் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதிக விலைக்கு கம்பிகளை விற்பனை செய்து வருகின்றன.

சட்டவிரோத லாபம்

தங்களுக்குள் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு கட்டுமானங் களுக்கான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் கூடுதல் விலைக்கு கம்பிகளை விற்று சட்டவிரோதமாக லாபம் ஈட்டி வருகின்றன.

இதனால் கட்டுமானத் துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

எனவே எங்களின் புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இதுதொடர்பாக சிபிஐ 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்