சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே பாதுகாப்புப் படை தேர்தல் கண்காணிப்பு சிறப்பு குழு ஆய்வாளர் அக்பர்அலிதலைமையிலான ரயில்வே போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த ஒருவரிடம் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் ஆந்திர மாநிலம், கூடூர் பகுதியை சேர்ந்த சென்னையா (51) என்பதும், கடையில் விற்பனைக்கு தேவையான பேன்சி பொருட்களை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது.
இருப்பினும் அவர் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தைபறிமுதல் செய்த போலீஸார் அதை துறைமுக தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
சினிமா
3 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
37 mins ago
சினிமா
43 mins ago
இந்தியா
24 mins ago
கருத்துப் பேழை
33 mins ago
தமிழகம்
58 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago