பசுவந்தனை அருகே தெற்கு பொம்மையாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த காளிப்பாண்டி மகன்பாலமுருகன்(23). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன், குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்கப்பட்டார். கடந்த மாதம்13-ம் தேதி பிணையில் வந்த அவர்,நேற்றுமுன்தினம் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தெற்கு பொம்மையாபுரம் இரட்டை கொலையில் பழிக்குபழியாக பாலமுருகன் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி (35),கரிசல்குளத்தைச் சேர்ந்த முனியசாமி (45), மாரிராஜ் (35) ஆகியோரைபோலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
உலகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
6 hours ago