ரயிலில் சிக்கிதாய், மகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் வட்டம் கீழ்விலாச்சூர் கிராமம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (34). இவர், சென்னை பூந்தமல்லி பகுதியில் மத்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (29), இவர் களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் நந்திதா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், ராஜேஷ் குமாரின் மனைவி ஜெயந்தி தனதுமகள் நந்திதாவை மட்டும் அழைத்துக்கொண்டு நேற்று காலை விரிஞ்சிபுரம் - குடியாத்தம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச்சென்ற சரக்கு ரயிலில் தாயும், மகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தனர்.

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் சபரிநாத் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயந்தி மற்றும் நந்திதா உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்