காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் துறையினர் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகள், சோதனைச்சாவடிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் நேற்று சோதனை நடத்தினர். மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தப் பட்டது.
அப்போது, ரயிலுக்காக காத்திருந்த பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சலில் வந்த பொருட்களை ரயில்வே பாதுகாப்புப்படையினர் சோதனையிட்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ எடையுள்ள பான் மசாலா ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை ரயிலில் கடத்தி வந்தது யார் ? என்பது குறித்து ரயில்வே பாதுகாப்புப்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago