தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், அதன் தலைவர் விசுவநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவுச் சங்கங்களில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற மானியக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக் கடன், பயிர்க் கடன் ஆகியவற்றை மாநில அரசின் நிதியைக் கொண்டு தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களையும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago