அரக்கோணம் அருகே நீரில் மூழ்கி சிறுமி உட்பட 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

அரக்கோணம் அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற முயன்ற பெண் சிறுமியுடன் உயிரிழந்தார்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந் தவர் இமையா(14). அரசு பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வந்த இமையாவுக்கு பள்ளி விடுமுறை என்பதால், கால்நடைகளை தினசரி மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை தனது கால்நடைகளை மேய்ச்சலுக்காக இமையா ஓட்டிச்சென்றார். மாலையில் வீடு திரும்பும்போது, அருகேயுள்ள ஆற்றில் கை, கால்களை கழுவ ஆற்றுப்பகுதிக்கு சென்றார்.

அப்போது இமையா தவறி ஆற்றில் விழுந்து தத்தளித்தார். இதைக்கண்ட அவ்வழியாக சென்ற அதேபகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (48) என்பவர் ஆற்றில் இறங்கி சிறுமியை மீட்க முயன்றார்.

அதில், சிறுமியுடன் கோவிந்தம் மாளும் நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பிறகு, அரக்கோணம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இமையா, கோவிந்தம்மாள் ஆகியோரின் உடல்களை மீட்டனர். இது தொடர்பாக அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்