செஞ்சி அருகே 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே அணிலாடி கிராமத் தைச் சேர்ந்தவர் தேவசகாயம் (60). இவரது மூத்த மகன் ஜான்சன் (28) மும்பையில் இன்ஜினி யரிங் நிறுவனம் நடத்தி வருகி றார். அவருக்கு உதவி செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,தேவசகாயம், மனைவி காணிக் கைமேரியுடன் (56) மும்பைக்கு சென்றார்.

அவரது வீட்டின் கதவு பூட்டு உடைத்து இருப்பதாக நேற்று முன்தினம் அவரது உறவினர் போனில் தகவல் தெரிவித்தார். இதன் பேரில் தேவசகாயம் அணிலாடிக்கு வந்தார். அப் போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ வில் இருந்த 20 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, 30 கிலோ பித்தளை விளக்குகள், ரூ.1,05,500ரொக்கம் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது. தேவசகா யம் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரும் 27-ம் தேதி தேவசகாயத் தின் மகன் ஜான்சனுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில் திருடு போனதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்