கல்லூரி வளாக தூதுவர்களுக்கு ஸ்மார்ட் செல்போன் பரிசு தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் சிறப்பாக செயல்படும் கல்லூரி வளாக தூதுவர்களுக்கு ஸ்மார்ட் செல் போன் பரிசாக வழங்கப்படும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ‘கல்லூரி வளாக தூதுவர்கள்’ நியமிக்கப்பட் டுள்ளனர். அவர்களுடனான ‘ஆன் லைன்’ ஆலோசனை கூட்டம் ஆட்சி யர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது அவர் பேசும்போது, “கல்லூரி வளாக தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தங்களது கல்லூரியில் படிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இணையதளம், கோட் டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சி யர்கள் மூலமாக வாக்காளர் பட்டி யலில் பெயர்களை சேர்க்கலாம். 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள், தங்கள் பெயர் களை சேர்க்க, இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பணியில் சிறப்பாக பங்கேற்று செயல்படும் கல்லூரி வளாக தூது வர்களுக்கு ஸ்மார்ட் செல்போன் பரிசாக வழங்கப்படும்" என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கோட்டாட் சியர்கள் தேவி, ஜெயராமன், விமலா உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

42 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்