வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 12 - ஆகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,522- ஆகவும் அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,517-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,260-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 18,909 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 283 பேர் உயிரிழந்துள்ளனர்.முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
7 hours ago