மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த நிம்மேலி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் சின்னையன் மகன் வெங்கடேஷ்(24), சுப்பிரமணியன் மகன் நடராஜன்(34). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரே இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்துக்குச் சென்றுவிட்டு, சீர்காழி நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர்.
சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் மதகடி என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மதகில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த வெங்கடேஷ், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நடராஜனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக, கொள்ளிடம் போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
தமிழகம்
7 mins ago
இந்தியா
11 mins ago
க்ரைம்
5 mins ago
தமிழகம்
28 mins ago
இந்தியா
32 mins ago
தொழில்நுட்பம்
37 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
கல்வி
5 hours ago