விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பியதால் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் களைகட்டிய மீன் விற்பனை

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டத்தில் ‘நிவர்', ‘புரெவி' புயல்கள் காரணமாக கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், கடந்த நவ.23-ம் தேதியில் இருந்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், கடல் சீற்றம் குறைந்ததையடுத்து, நாகையில் கடந்த 6-ம் தேதி முதல் பைபர் படகு மீனவர்களும், மறுநாள் 7-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்களும் கடலுக்குச் சென்றனர்.

தொடர்ந்து, கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பத் தொடங்கி உள்ளனர். அவர்களின் வலைகளில் சங்கரா, சீலா, வஞ்சிரம், இறால், கானாங்கெளுத்தி, பாறை, நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியுள்ளன. இதனால், நேற்று அதிகாலை முதலே நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் களைகட்டியது. வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிப் போட்டுக்கொண்டு, மீன்களை வாங்கிச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

21 mins ago

உலகம்

35 mins ago

தமிழகம்

40 mins ago

உலகம்

45 mins ago

வாழ்வியல்

20 mins ago

விளையாட்டு

48 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்