தி.மலை அதிமுக சார்பில் தேர்தல் பணி கள ஆய்வு

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாக்குச்சாவடி வாரியாக சென்று கள ஆய்வு செய்யும் பணி திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் மற்றும் போளூர் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளரும் ஆவின் தலைவரு மான அக்ரி. எஸ்.எஸ் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும் மற்றும் தேர்தல் பொறுப்பாளருமான மோகன் கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து, மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், தேர்தலில் செயல் படுவது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவில் படித்த இளைஞர் மற்றும் இளம் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்டச் செயலாளர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்