பஞ்சப்பள்ளி அருகே போலி மருத்துவர் கைது

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே போலி மருத்து வரை போலீஸார் கைது செய்தனர்.

பாலக்கோடு வட்டம் பாளையம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் கிளினிக் நடத்துவதாக தருமபுரி மாவட்ட ஊரக மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாலக்கோடு மருத்துவ அலுவலர் மருத்துவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை அப்பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், பாலக்கோடு அடுத்த நம்மாண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி அனிதா(47) என்பவர் பாளையம் கிராமத்தில் 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருவது தெரிய வந்தது. அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. எனவே, மருத்துவ அலுவலர் அவர் மீது பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த கிளினிக் சீல் வைக்கப்பட்டது. போலி மருத்துவர் அனிதா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சினிமா

3 hours ago

மேலும்