வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், வேலூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தேவராஜ் தலைமை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி மூலம் உறுப்பினர் சேர்த்தல் மூலம் மேற்கு மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரத்து 439 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். விரைவில், 1 லட்சம் பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணையவழியில் இணைக்கப்படுவார்கள்.
திமுகவில் அதிக உறுப்பினர்களை இணைக்க மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் பெரும் துணையாக இருக்கின்றனர்‘‘ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago