வரும் 10-ம் தேதி பி.எப். குறைதீர் கூட்டம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘‘அக்டோபர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில், இணையதளம் வழியாக வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சந்தாதாரர்களுக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு 12 மணி முதல் 1 மணி வரையும் நடைபெறும். பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது குறைகளை பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களுடன் வரும் 9-ம் தேதிக்கு முன்னதாக கோவையிலுள்ள மண்டல பி.எப். அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். இணைய வழிக் கூட்டத்துக்கான இணைப்பு மனுவில் அளிக்கப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்