கோவை: கோவை காந்திபுரம் 3-வது வீதியைச் சேர்ந்தவர் கனிமொழி(30). இவர், சில தினங்களுக்கு முன்னர் ஆவாரம்பாளையம் சாலையில் நடந்துசென்றபோது, இரு இளைஞர்கள் “இந்தப் பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது, நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்” எனக்கூறி, கனிமொழியிடம் இருந்த ஒன்றரை பவுன் நகையை நூதன முறையில் பறித்துச் சென்றனர். காட்டூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். நகையை பறித்துச்சென்றவர்கள் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக்(36), ஹரிபிரசாத்(35) என தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago